ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த உத்தரவு

  சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு 19 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று  தலைமைச் செயலாளர் சண்முகம் காவல்துறை மற்றும் அனைத்து துறையினருக்கும்  அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.