புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிரடி அறிவிப்பு


புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் அளித்த பேட்டி வருமாறு-


 புதுச்சேரியில் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களாலும் வேகமாக பரவி வரும் கொரோனாத் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வரும் செவ்வாய்க்கிழமை முதல்


  கடைகள் காலை 6 மணி மதல் மதியம் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.


  பெட்ரோல் பங்குகளும் மதியம் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.


  புதுச்சேரி கடற்கரை சாலை 10 நாட்களுக்கு மூடப்படும்.


  முகக்கவசம் அணியாமல் இனி வெளியே சென்றால் 100 க்குப் பதில் இனி 200 அபராதம் விதிக்கப்படும்.


  மதுக்கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்.


  ஓட்டல்கள் மதியம் 2 மணிவரை அமர்ந்து சாப்பிடலாம்.இரவு 9 மணி வரை பார்சல் வழங்கலாம்.


  கட்டுமான பணி, விவசாயம், இயங்க தடை இல்லை. 


  விவசாய பணிகள், அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவுப்படி செயல்படும். 


  தொழிற்சாலைகள் இயங்க 3 மணி வரை அனுமதி அளிக்கப்படும்.


  அனைவரும் கட்டாயம் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.


  இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.