10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

                         


                       


                         10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து 


                        முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


இது பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வருமாறு


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகமா உள்ள நிலையில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்தது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் இதனை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது . இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்து தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் சில மாவட்டங்களிலும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே, தொற்றினை கருத்தில் கொண்டும் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளும், 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த தேர்வை ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பெண்  காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவிற்காக 20 சதவீத மதிப்பெண்ணும் வழங்கப்படும்.12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்த வரையில் ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்பட இருந்த மறுதேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.