உன் வரவில் எங்கள் விடியல் மழை பற்றிய கவிதை
ஓ மழையே ! மழையே !! மழையே !!!
உன் வரவே எங்கள் உறவே !
உன் விடியலே ! எங்கள் மகிழ்வே !
உன் மகிழ்வே ! எங்கள் வாழ்வே !
உன் மகிழ்வே ! எங்கள் வாழ்வே !
( மழையே )
மனிதன் நினைக்கின்ற மழையே !
நாங்கள் நனைகின்றோம் விழியிலே !
கண்ணீர் சிந்தும் நாங்கள் !
உன் வரவை காணாத போது !
( மழையே )
தண்ணீர் சிந்தும் மக்களே !
மரம், செடி, கொடிகளை நட்டீரா !
இல்லை சேமிக்கத்தான் கற்றுக்கொண்டீரா !
நம் சந்ததியின் நலம் காப்பீரா .
( மழையே )
கவிதை ஆக்கம் விழிப்பிரியன் ( எ ) கார்த்திகேயன், ஆசிரியர், வித்தகன் மலர் வார பத்திரிக்கை, புதுச்சேரி.