பெண்களே! கணவனின் பூரண அன்பு கிடைக்கவில்லை என ஏங்குகிறீர்களா! மாசிமகம் அன்று கிரிவலம் குடும்பத்துடன் சென்று வாருங்கள். எல்லாம் வல்ல சிவன் அருளால் நன்மைகள் நடக்கும்.
கல்வித் துறையில் இருப்பவர்களுக்கும், மின் அணுத் துறையில் இருப்பவர்களுக்கும் பல்வேறு மேன்மைகளை இந்த மாசி பவுர்ணமி கிரிவலம் தரும். பல குடும்பங்களில் கணவன் தன்னுடன் அன்புடன் இருப்பதில்லை என்று ஏங்குகின்ற மனைவியின் ஏக்கத்தை நீக்கிட விரும்பும் இல்லத்தரசிகள் மாசி மாத பவுர்ணமி அன்று தனது தாய் தந்தை அல்லது சகோதர சகோதரிகளுடன் அல்லது மகன் மகளுடன் கிரிவலம் வரலாம்.அப்படி ஒரே ஒரு முறை மாசி மகத்துக்கு கிரிவலம் வந்தாலே கணவனின் பூரண அன்பு கிடைக்கும்.
முன்ஜென்ம வினைகள் தீர்க்கும்!
முன் ஜென்ம வினைகள் நீங்கவும், பிறருடைய சொத்துக்களை அபகரித்தவர்கள் மனம் திருந்தி வாழவும், குடும்பத்தில் அழுத்தும் நீண்ட காலக்கடன்கள் தீரும்.எனவே கிரிவலம் செல்வது அவசியம்.
மாசி மகத்தின் சிறப்புக்கள்
1.மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.
2.மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3.மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில்ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4.சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில்தான்.
5.மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
6.குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7.அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான்.
8.மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான்சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9.பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.
10.உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11.அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில்தான்.
12.காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள் மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.
13.மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள்.எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
14.இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
15.மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி.இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16.மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம்.அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17.மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர்.இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18.மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்த பின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19.மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20.மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்துவழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
மாசி மகத்தன்று செய்ய வேண்டியது என்ன?
மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும், தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்.பாவங்கள் தொலையும்.இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால் அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர்.
என்பது நம்பிக்கை.
இந்த மாசி மகநட்சத்திரத்தன்று புனித நீல் நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.உயர்ந்தவன், தரழ்ந்தவன் , ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம்.திருமாணமானவர்கள் தங்கள் மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
அன்றிரவு பவுர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும் பூஜைகள், அபிசேக ஆராதனைகள் தரிசிப்பது மிக்க நன்மை தரும்.
சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை ஷேத்திரங்களில் கிரிவலம் செல்வது சாலச் சிறந்தது.
நீர்நிலைகளில் நீராடும் போது பாதுகாப்பாக நீராடுங்கள். மாசி மகத்தை கொண்டாடுங்கள்.நல்வாழ்வு பெற்றிடுங்கள்.